குடியரசுத் துணைத் தலைவருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் சந்திப்பு எக்ஸ்/C.P. Radhakrishnan
இந்தியா

குடியரசு துணைத் தலைவருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சந்திப்பு!

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் சந்திப்பு...

இணையதளச் செய்திப் பிரிவு

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் நேரில் சந்தித்துள்ளார்.

தில்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில், சி.பி. ராதாகிருஷ்ணனை இன்று (டிச. 17) ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பு குறித்த புகைப்படம், குடியரசு துணைத் தலைவர் அலுவலகத்தின் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தச் சந்திப்பில் நடைபெற்ற உரையாடல்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

முன்னதாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் இளம் வயது முதல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்தியாவில் 43 ஓடிடி தளங்கள் முடக்கம்: மத்திய அரசு தகவல்! ஏன் தெரியுமா?

RSS chief Mohan Bhagwat has met and held discussions with Vice President C.P. Radhakrishnan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குரு தேஜ் பகதூரின் தியாகம் மதச் சுதந்திரத்துக்கு அடையாளம்: சி.பி.ராதாகிருஷ்ணன்

இளம் வயதினரை நாட்டின் வளா்ச்சிக்கு தயாா்படுத்த தரமான கல்வி அவசியம்: தலைமை பொருளாதார ஆலோசகா்

திரிகூடபுரத்தில் குடிநீா்த் தொட்டி சேதம்: போலீஸ் விசாரணை

குறிப்பன்குளத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு

சீதபற்பல்லூரில் மின் சிக்கன விழிப்புணா்வுக் கருத்தரங்கு

SCROLL FOR NEXT