முகப்பு
இந்தியா

நாட்டின் செழிப்பே தனிநபர் முன்னேற்றத்திற்கு அடிப்படை: மோகன் பாகவத்!

கலாசார அமைப்பு நடத்தும் மாநாட்டில் மோகன் பாகவத் பேச்சு..

Updated On : 6 ஏப்ரல், 2026 at 7:25 AM
மோகன் பாகவத் - DPS
பகிர்:

நாடு செழிப்பாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்போது மட்டுமே தனிநபர் செழிப்படைய முடியும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் உடன் இணைந்த மாணவர்களுக்கான கலாசார அமைப்பான பாலகோகுலம் நடத்திய இரண்டு நாள் மாநாட்டை ஆர்எஸ்எஸ் தலைவர் தொடங்கிவைத்து உரையாற்றினார்.

நாடு செழிப்பாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்போது, ​​மக்கள் செழிப்பையும் பாதுகாப்பையும் அடைகின்றன. தனிநபர்கள் நாட்டின் செழிப்புக்காகவும் பாதுகாப்புக்காகவும் உழைக்கும்போது, ​​அவர்களும் செழிப்படைகிறார்கள். நாட்டைக் கட்டமைக்கும் பணியில் பங்களிக்குமாறு மக்கள் பெரும்பாலும் ஊக்குவிக்கப்படுவதாக அவர் கூறினார்.

Advertisement

இளைஞர்களைக் குறிப்பிட்டுப் பேசிய பாகவத், தனிப்பட்ட தொழில் வளர்ச்சியை மையமாகக் கொள்வதா அல்லது நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்பதா என்பதில் பெரும்பாலும் குழப்பம் நிலவுகின்றது.

இதில் எந்தக் குழப்பமும் தேவையில்லை, ஏனெனில், தொழில் வளர்ச்சியை உருவாக்குவதும் நாட்டிற்காக உழைப்பதும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பதில்தான் இதன் முக்கியத்துவம் அடங்கியுள்ளது என்று அவர் கூறினார்.

மாநாட்டுத் தொடக்க விழாவில் பாலகோகுலம் நிகழ்வில் பங்கேற்ற குழந்தைகளுடனும் அவர் கலந்துரையாடினார்.

summary

RSS chief Mohan Bhagwat on Monday said individual prosperity can be achieved only when the country is prosperous and secure.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments