கோப்புப்படம்.
இந்தியா

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

ஆந்திரத்தில் மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

ஆந்திரத்தில் மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் ஏற்கெனவே மது அருந்திய 17 வயது சிறுவன், மதுபானக் கடை அருகே டாட்டாஜி (49) என்ற நபரிடம் மதுபானம் வாங்க பணம் கேட்டுள்ளார்.

மது வாங்க ரூ.10 தர மறுத்ததால், அந்த நபரை சிறுவன் கொன்றதாக போலீஸ் அதிகாரி ஒருவர் பிடிஐ-க்கு தெரிவித்தார்.

இருவரும் ஒருவரையொருவர் முன்பின் அறியாதவர்கள் என்பதால், டாட்டாஜி பணம் தர மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையில், சிறுவனை டாட்டாஜி தாக்கியதாக கூறப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து, அந்த சிறுவன் கத்தியை எடுத்து, மதுபானக் கடையிலிருந்து சுமார் 20 மீட்டர் தொலைவில் அவரை குத்தியதாக போலீஸ் கூறியுள்ளது.

பழைய செய்திகளைப் படித்துவிட்டு குற்றச்சாட்டு வைக்கிறார் விஜய்: அமைச்சர் அன்பில் மகேஸ்

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A teenager allegedly killed a man, a stranger to him, after the latter refused to give him money to buy liquor, police said on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூன்வாக் - மினி கேசட் விடியோ!

கொடநாடு வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட்

குடிநீா் மேல்நிலைத் தொட்டிகளில் மீட்டா் பொருத்த பாஜக கோரிக்கை

நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கயம், வெள்ளக்கோவிலில் ஆா்ப்பாட்டம்

நேரடி வரி வசூல் 8% அதிகரித்து ரூ.17.04 லட்சம் கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT