இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ (கோப்புப்படம்) ANI
இந்தியா

இந்தியா - பாகிஸ்தான் சண்டையில் மத்தியஸ்தம்! அமெரிக்காவைத் தொடர்ந்து சீனா அறிவிப்பு!

இந்தியா - பாகிஸ்தான் சண்டையில் மத்தியஸ்தம் செய்ததாக சீனா கருத்து...

இணையதளச் செய்திப் பிரிவு

சீனா மத்தியஸ்தம்: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டையை நிறுத்த மத்தியஸ்தம் செய்ததாக சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ அறிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட சண்டையை, வர்த்தகத்தை முன்வைத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை மூலம் தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பலமுறை தெரிவித்துள்ளார்.

ஆனால், பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் இந்திய அதிகாரிகளை தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதால்தான் பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நிறுத்தியதாக இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தப்பட்ட விவகாரத்தில் எந்த மூன்றாம் தரப்பு தலையீடும் இல்லை என்று இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்த நிலையில், சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் பேசிய அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ, இந்தியா - பாகிஸ்தான் சண்டைக்கு மத்தியஸ்தம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசியதாவது:

“இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, இதுவரை இல்லாத அளவிலான போர்களும், எல்லைத் தாண்டிய மோதல்களும் இந்தாண்டு நடைபெற்றன. புவிசார் அரசியல் கொந்தளிப்பு தொடர்ந்து ஏற்பட்டது. நீடித்த அமைதியை உருவாக்க நாங்கள் நியாயமான நிலைப்பாட்டை எடுத்து, மூல காரணங்களை கையாள்வதில் கவனம் செலுத்தினோம்.

பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான அணுகுமுறையைப் பின்பற்றி, வடக்கு மியான்மர், ஈரானிய அணுசக்திப் பிரச்னை, பாகிஸ்தான் - இந்தியா இடையிலான மோதல், பாலஸ்தீனம் - இஸ்ரேல் போர் மற்றும் கம்போடியா - தாய்லாந்து சண்டை ஆகியவற்றுக்கு சீனா மத்தியஸ்தம் செய்தது.” எனத் தெரிவித்துள்ளார்.

Mediation in the India-Pakistan conflict: China's announcement follows that of the US!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர், தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துங்கள்! - இபிஎஸ் அறிவுறுத்தல்

இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவின் 4 பேர்! யார் இவர்கள்?

2026 ஜன.1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிமுறைகள்! அறியாவிட்டால் பாக்கெட் காலி!

2026-ல் 12 ராசிக்காரர்களும் செய்யவேண்டிய பரிகாரங்கள்!

கம்பேக் கொடுத்த நிவின் பாலி... வசூலில் கலக்கும் சர்வம் மாயா!

SCROLL FOR NEXT