நாளை பௌர்ணமி: பிரயாக்ராஜில் அதிகாரிகள் பிறப்பித்த முக்கிய உத்தரவு
நாளை பௌர்ணமியை முன்னிட்டு பிரயாக்ராஜில் அதிகாரிகள் பிறப்பித்த முக்கிய உத்தரவு
புதன்கிழமை மாகி பூர்ணிமா புனித நீராடல் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பிரயாக்ராஜில் போக்குவரத்துக் காவல்துறையினர் மிக முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
கும்பமேளா நடைபெற்று வரும் பகுதியில், வாகனங்கள் அனுமதி இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் தவிர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, பிப்ரவரி 11 முதல், கும்பமேளா நடக்கும் பகுதியைச் சுற்றிலும் புதிய கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வாகனங்களை அதற்கென இருக்கும் இடத்தில் நிறுத்திவிட்டு நடந்துசெல்லும் வகையில் திட்டமிடப்படுள்ளது.
Advertisement
Advertisement
இதனால் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகன நெரிசல் மற்றும் வாகனங்களுக்குள்ளேயே மக்கள் சிக்கிக் கொள்வது என்ற நிலை தவிர்க்கப்படும் என்று தெரிகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.