முகப்பு
இந்தியா

சரிவில் பங்குச் சந்தை! சுகாதாரம், பார்மா துறை பங்குகள் வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தை வணிகம் நேற்று சரிவுடன் முடிந்த நிலையில், இன்று (பிப். 19) சரிவுடன் தொடங்கியது.

Updated On : 19 பிப்ரவரி, 2025 at 5:50 AM
கோப்புப் படம்
பகிர்:

இந்திய பங்குச் சந்தை வணிகம் நேற்று சரிவுடன் முடிந்த நிலையில், இன்று (பிப். 19) சரிவுடன் தொடங்கியது.

காலை 9.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 290.97 புள்ளிகளும் நிஃப்டி 91.70 புள்ளிகள் சரிவுடனும் வணிகம் தொடங்கியது. சுகாதாரம் மற்றும் பார்மா துறை பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

காலை 11 மணி நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 88.99 புள்ளிகள் உயர்ந்து 76,051.62 புள்ளிகளாக வணிகம் நடைபெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.11 சதவீதம் உயர்வாகும்.

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 9.95 புள்ளிகள் உயர்ந்து 22,955.25 புள்ளிகளாக வணிகம் நடைபெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.034 சதவீதம் உயர்வாகும்.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 17 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் உள்ளன. எஞ்சிய 13 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.

இதில் அதிகபட்சமாக சொமாட்டோ நிறுவனப் பங்குகள் 4% வரை உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக எல்&டி, கோட்டாக் வங்கி, அல்ட்ராடெக் சிமென்ட், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.

டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலிவர்ஸ், பார்தி ஏர்டெல், பவர் கிரிட், மாருதி சுசூகி உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவுடன் காணப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →