இந்தியா

மூவரின் உயிரைப் பறித்த பப்ஜி மோகம்!

பிகாரில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து பப்ஜி விளையாடியவர்கள் மீது ரயில் மோதி பலி

DIN

பிகாரில் தண்டாவளத்தில் அமர்ந்து பப்ஜி விளையாடிய 3 இளைஞர்கள் ரயில் மோதி பலியாகினர்.

பிகாரில் மேற்கு சம்பரன் பகுதியில் நார்கடியாகஞ்ச் - முசாஃபர்பூர் இடையேயான ரயில் பாதையில் ஃபுர்கான் ஆலம், மன்ஷா தோலா, சமீர் ஆலம் ஆகிய மூவரும் காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு, தண்டவாளத்தில் பப்ஜி விளையாடியதால், ரயில் வருவதை அறியவில்லை. இந்த நிலையில், அவர்கள் மூவர் மீதும் ரயில் மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மூவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விடியோ கேம் மூலம் ஏற்பட்ட கவனச் சிதறலால் மூவரும் பலியானதையடுத்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT