முகப்பு
இந்தியா

தில்லியில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் கொட்டப்படும் குப்பைகள்: ஓவைசி குற்றச்சாட்டு!

தில்லி ஆம் ஆத்மி அரசு மீது மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி குற்றச்சாட்டு.

Updated On : 4 ஜனவரி 2025, 5:06 pm IST
அசாதுதீன் ஓவைசி
பகிர்:

தில்லியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதாக ஆம் ஆத்மி அரசு மீது மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

முஸ்லிம்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாக இன்று பேசிய அசாதுதீன் ஓவைசி, “தில்லியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சட்டமன்றத் தொகுதிகளில் ஒட்டுமொத்த தில்லியின் குப்பைகளும் கொட்டப்படுகின்றன. மருத்துவமனைகளோ பள்ளிகளோ முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் கட்டப்படுவதில்லை. அந்தப் பகுதிகளில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீடுகளில் எத்தனை வீடுகள் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டன? அரசு திட்டங்களில் முஸ்லிம்களுக்கான பங்கு என்ன? என்று தெரிந்துகொள்ள ஆர்டிஐ மூலம் கேள்வி கேட்டு இரு விண்ணப்பங்களை நான் தாக்கல் செய்துள்ளேன். ஆம் ஆத்மி அரசாக இருந்தாலும் சரி, மத்திய அரசாக இருந்தாலும் சரி. தேர்தலுக்கு முன்னர் மட்டுமே அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன.

Advertisement

Advertisement

பாஜகவின் ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டம் என்பது வாக்காளர்களின் விருப்பத்திற்கு மாறானது மட்டுமல்ல. அரசியலமைப்பிற்கு எதிரானது” என்று அவர் தெரிவித்தார்.

2020 சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 70 இடங்களில் 62 இடங்களை வென்றது. முன்னதாக, 2015 சட்டப்பேரவை தேர்தலில் 70 இடங்களில் 67 இடங்களை வென்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது.

15 ஆண்டுகள் தொடர்ச்சியாக தில்லியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி கடந்த இரு சட்டப்பேரவை தேர்தல்களில் எந்த இடத்தையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments