இந்தியா

சிறுவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 4 வயது சிறுமி!

சத்தீஸ்கரில் இரண்டு சிறுவர்களால் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு

DIN

சத்தீஸ்கரில் இரண்டு சிறுவர்களால் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் நாராயண்பூரில் வசிக்கும் 4 வயது சிறுமியை கடந்த 10 ஆம் தேதி விளையாட அழைத்த இரண்டு சிறுவர்கள், அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். ஆனால், இதனையறியாத சிறுமியின் பெற்றோர், சிறுமியின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதாக நினைத்து, சிறுமியை ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனை சிகிச்சையின் பின்னர்தான், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது அவரது பெற்றோருக்கு தெரிய வந்தது.

இதற்கிடையே, சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு மருத்துவமனை நிர்வாகம் புகார் அளித்தது.

இதனையடுத்து, சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில், சிறுமியின் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் சிறுவன் ஒருவனும், பக்கத்து வீட்டில் வசிக்கும் மற்றொரு சிறுவனும்தான் என்பது தெரிய வந்தது, இரு சிறுவர்களில் ஒருவன் 5 ஆம் வகுப்பும், மற்றொருவன் 8 ஆம் வகுப்பு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது சிறுமி நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீர்ப்பு எதிரொலி: முதுநிலை ஆசிரியர் தேர்வு தொடங்கியது!

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் தாக்குதல்! 12 பேர் பலி!

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

SCROLL FOR NEXT