தேனிலவு கொலை file photo
இந்தியா

தேனிலவு கொலையால் ஈர்க்கப்பட்டு.. கணவரைக் கொன்ற பெண்! காரணம்?

தேனிலவு கொலை சம்பவம் பற்றிய செய்தியால் ஈர்க்கப்பட்டு தனது கணவரைக் கொன்ற பிகார் பெண் பற்றி..

DIN

மேகாலயத்துக்கு தேனிலவு அழைத்துச் சென்று கணவரைக் கொலை செய்த சம்பவத்தைப் பார்த்து அதனால் ஈர்க்கப்பட்ட பிகார் பெண், தனது கணவரை சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்தேறியிருக்கிறது.

பிகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில், திருமணமான 45 நாள்களில், தனது மாமாவுடனான தவறான உறவை கைவிட முடியாமல், கணவரைக் கொலை செய்திருக்கிறார் குஞ்ஜா சிங். ஜூன் 24ஆம் தேதி, நபிநகர் ரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த 24 வயது பிரியன்ஷு குமார் சிங் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தை விசாரித்த காவல்துறையினர், இது கூலிப்படையினரின் வேலையாக இருக்கலாம், தொழில் போட்டி காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்றுதான் நினைத்திருந்தனர். ஆனால், தீவிர விசாரணையில், பிரியன்ஷுவின் சொந்த மனைவியே இந்தக் கொலையை செய்திருக்கிறார் என்பது தெரிய வந்தது.

இது குறித்து காவல்துறை கூறுகையில், பிரியன்ஷு மனைவிக்கும், அவரது மாமா ஜீவன் சிங் (52) இடையே 15 ஆண்டுகளுக்கும் மேலாக தகாத உறவு இருந்திருக்கிறது. குடும்பத்தினரின் கட்டாயத்தின்பேரில், குஞ்சா சிங், பிரியன்ஷுவை திருமணம் செய்துகொண்டுள்ளார். ஆனால், அவரால் பிரியன்ஷுவுடன் வாழ முடியவில்லை. அப்போதுதான் தேனிலவு கொலை பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன. அதனைப் பார்த்து, தானும் கணவரைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

ஜீவன் சிங்குடன் இணைந்து, புதிதாக சிம் கார்டு, செல்போன் வாங்கி, கூலிப் படையை அமர்த்தியுள்ளார்.

சம்பவத்தன்று, பிரியன்ஷு, வாராணசியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, தனது மனைவியிடம் தான் எங்கு வந்துகொண்டிருக்கிறேன் என்பதை தெரிவிக்க, அவரும் கூலிப்படைக்கு அந்த தகவலைக் கூறியிருக்கிறார். அவர்கள் பிரியன்ஷுவை சுட்டுக் கொலை செய்திருக்கிறார்கள்.

பிறகு விசாரணையின்போது பிரியன்ஷுவை, அவரது மனைவியே ஆள்களை அமர்த்தி கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். ஜீவன் சிங் தலைமறைவாக உள்ளார். அவரைத் தேடும் பணி நடந்து வருகிறது.

தேனிலவு கொலையே நாட்டை உலுக்கிய நிலையில், அதனைப் பார்த்து பிகாரில் இப்படியொரு கொலை நடந்திருப்பது, உள்ளூர் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இதையும் படிக்க.. மனித கருமுட்டை, நஞ்சுக்கொடி, மூளையிலும் பிளாஸ்டிக் நுண்துகள்கள்!

A Bihar woman shot and killed her husband after being inspired by the incident of him taking her on a honeymoon to Meghalaya and then killing her.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை: அஜித் பவார்

கனிமொழிக்கு பெரியார் விருது: திமுக அறிவிப்பு

ஓய்வை அறிவித்தார் புஜாரா!

சில நேரங்களில் சினிமா என்பது... சௌபின் சாகிர் நெகிழ்ச்சி!

2 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறை... ஆஸி. பேட்டிங்கில் கம்பேக்!

SCROLL FOR NEXT