கர்நாடகத்தில் முதல்வர் பதவி காலியாக இல்லை: சித்தராமையா!
கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசியுள்ளதைப் பற்றி...
கர்நாடகத்தில் முதல்வர் மாற்றம் குறித்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அம்மாநிலத்தில் முதல்வர் பதவி காலியாக இல்லை, என முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைநகர் தில்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்திக்கச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கர்நாடகத்தில் முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்பட்டு, அம்மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் முதல்வராகப் பதவி உயரக்கூடும் என வெளியான தகவல்கள் பேசுப்பொருளாகின.
Advertisement
Advertisement
இதுகுறித்த, பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர், 5 ஆண்டுகளும் தானே முதல்வராகத் தொடரப்போவதாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் பேசியதாவது:
“முதல்வர் பதவி காலியாக உள்ளதா? நான் உங்கள் முன்புதானே இருக்கின்றேன். கர்நாடகத்தின் முதல்வர் நான்தான். இதைதான், டி.கே. சிவக்குமாரும் கூறினார். அதையே நானும் சொல்கின்றேன். இங்கு பதவி (முதல்வர்) காலியாக இல்லை” என அவர் பேசியுள்ளார்.
முன்னதாக, கர்நாடகத்தில் சில சட்டப்பேரவை உறுப்பினர்கள் துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரை முதல்வராக்க வேண்டும் என்று ஆதரவளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Putting an end to reports of a change in the Chief Ministerial post in Karnataka, Chief Minister Siddaramaiah has said that the post of Chief Minister is not vacant in the state.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.