காலம் பதில் சொல்லும்: முதல்வர் போட்டியில் சிவக்குமார்?
கர்நாடக முதல்வராக பதவியேற்பதற்கு காலம் பதில் சொல்லும் என்று துணை முதல்வர் சிவக்குமார் பேச்சு
கர்நாடக முதல்வராக உயர்வதற்கு காலம்தான் பதில் சொல்லும் என்று மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
மங்களூரில் துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரிடம், எப்போது முதல்வராக பதவி உயர்வு பெறுவார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து டி.கே. சிவக்குமார் பேசுகையில், "மக்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நீங்கள் (ஊடகங்கள்) என அனைவருக்கும் விருப்பம் இருக்கிறது. ஆனால், கட்சி சொல்வதைத்தான் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்" என்று கூறினார்.
Advertisement
Advertisement
தொடர்ந்து, மாநில பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகு அவரது முதல்வர் பதவியேற்பை எதிர்பார்க்க முடியுமா என்ற கேள்விக்கு, "காலம்தான் பதிலளிக்கும்" என்றும் தெரிவித்தார்.
மேலும், மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா முதல்வராகப் பதவியேற்பதற்கு பட்டியலினத்தவர்கள் கோரிக்கை விடுவது குறித்த கேள்விக்கு, "இதில் என்ன தவறு இருக்கிறது. ஆதரவாளர்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துகின்றனர். அவர்களை வேண்டாம் என்று நாம் கூற முடியாது" என்றும் கூறினார்.
முன்னதாக, "மாநிலத்தின் தலைமையில் எந்த மாற்றமும் இருக்காது என்பதுபோல தான் கட்சி மேலிடம் சமிக்ஞை தெரிவித்துள்ளது. ஆகையால், 5 ஆண்டுகளுக்கும் சித்தராமையாதான் முதல்வராக இருப்பார்" என்று சித்தராமையாவின் மகன் யதீந்திரா சித்தராமையா கூறியதும் குறிப்பிடத்தக்கது.
Time will answer when I will become CM, says D K Shivakumar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.