தீ விபத்து 
இந்தியா

ஹைதராபாத்தில் குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து: 5 பேர் மீட்பு

ஹைதராபாத்தில் இன்று அதிகாலை குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் மீட்கப்பட்டனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

ஹைதராபாத்தில் இன்று அதிகாலை குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் மீட்கப்பட்டனர்.

மொகல்புராவில் உள்ள ஐஜாஸ் குடியிருப்பின், பிளாட் எண் 201இல் உள்ள மேல் மாடிக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்துக்குத் தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கட்டடத்தில் சிக்கியிருந்த ஐந்து பேரைத் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

வீடுகளில் உள்ள சுவிட்ச்போர்டில் ஏற்பட்ட மின்கசிவு தீ விபத்துக்குக் காரணமாக அமைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்கப்பட்டவர்களில் சையத் அப்துல் கரீம் சாஜித் (55, உடல் ஊனமுற்றோர்), அதியா பேகம் (47), ஃபர்ஹீன் பேகம் (27), சையத் இமாம் ஜாபர் (19) முகமது ரிஸ்வான் உத்தின் (38) ஆகியோர் அடங்குவர்.

தீயணைப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, தீயணைப்பு கட்டுப்பாட்டுக் குழு ஒரு ரோபோ மற்றும் இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்தது, மேலும் யாருக்கும் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை. தீ அணைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

Five persons were rescued after a fire broke out at a residential building in the early hours of Wednesday in Hyderabad.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குச் சென்ற இந்தியர் சுட்டுக் கொலை! ஏன்?

பொறியியல் பணிகள்: விழுப்புரம் ரயில்கள் பகுதியளவில் ரத்து

சமூக வலைதளங்கள் முடக்கம்! போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! 5 பேர் பலி! | Nepal protest

டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

வைகோ தலைவராக தோல்வியைத் தழுவியிருக்கிறார்!மதிமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்! மல்லை சத்யா பேட்டி

SCROLL FOR NEXT