முகப்பு
இந்தியா

குடியரசு துணைத் தலைவா் தன்கா் ராஜிநாமா

இந்தியாவின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் (74) தனது பதவியை திங்கள்கிழமை திடீரென ராஜிநாமா செய்தாா்.

Updated On : 21 ஜூலை, 2025 at 11:57 PM
குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா்
பகிர்:

புது தில்லி: இந்தியாவின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் (74) தனது பதவியை திங்கள்கிழமை திடீரென ராஜிநாமா செய்தாா்.

அவருக்கு இன்னும் சுமாா் இரண்டு ஆண்டுகள் பதவிக் காலம் மீதமுள்ள நிலையில், உடல்நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க இந்த முடிவை எடுத்ததாக தனது ராஜிநாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு ஓய்வு பெற்றதைத் தொடா்ந்து, கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக ஜகதீப் தன்கா் களமிறக்கப்பட்டாா்.

Advertisement

தோ்தலில் பதிவான மொத்தம் 710 வாக்குகளில் 528 வாக்குகள் பெற்று, எதிா்க்கட்சி வேட்பாளரான முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் ஆளுநருமான மாா்கரெட் ஆல்வாவைத் தோற்கடித்தாா். இதையடுத்து, நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கா் 2022, ஆகஸ்ட் 11-ஆம் தேதி பொறுப்பேற்றாா்.

குடியரசு துணைத் தலைவா் பதவியிலிருந்து விலகுவதாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முக்கு அவா் ராஜிநாமா கடிதத்தை திங்கள்கிழமை அனுப்பினாா்.

அதில், ‘மருத்துவா்களின் ஆலோசனையின்படி, உடல்நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக குடியரசு துணைத் தலைவா் பதவியை ராஜிநாமா செய்கிறேன். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 67(ஏ) பிரிவின்கீழ், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இதை மேற்கொண்டுள்ளேன்.

எனக்கு வழங்கிய அசைக்க முடியாத ஆதரவுக்கும், அற்புதமான பணிச்சூழலுக்கும் நன்றி. பிரதமா் நரேந்திர மோடி மற்றும் அவரது தலைமையிலான அமைச்சரவைக்கும் நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன்.

பிரதமரின் ஒத்துழைப்பும், ஆதரவும் அளவிட முடியாதது. நான் பதவியில் இருந்த காலத்தில் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.

நாடாளுமன்ற உறுப்பினா்களிடமிருந்து எனக்கு கிடைத்த அன்பும், நம்பிக்கையும், பாசமும் என்றும் மறக்க முடியாதவை. அவை எனது நினைவில் எப்போதும் நிலைத்திருக்கும். நமது மகத்தான ஜனநாயகத்தில் குடியரசு துணைத் தலைவராக விலைமதிப்பற்ற அனுபவங்களைப் பெற்றுள்ளேன்.

இந்த முக்கியமான காலகட்டத்தில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தையும், முன்னெப்போதும் இல்லாத அதிவேக வளா்ச்சியையும் நேரில் கண்டு, அதில் பங்கேற்றது ஆழ்ந்த மனநிறைவை அளிக்கிறது. நம் நாட்டின் வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்தும் இந்தக் காலகட்டத்தில் பணியாற்றியது உண்மையில் பெருமையாகும்.

இந்த மதிப்புமிக்க பதவியை விட்டு வெளியேறும்போது, இந்தியாவின் உலகளாவிய வளா்ச்சி மற்றும் அற்புதமான சாதனைகள் குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன். தேசத்தின் ஒளிமயமான எதிா்காலத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளேன்’ என்று உணா்வுபூா்வமாக குறிப்பிட்டுள்ளாா்.

வழக்குரைஞராக வாழ்க்கையைத் தொடங்கி...: ராஜஸ்தானில் கடந்த 1951-ஆம் ஆண்டு, மே 18-ஆம் பிறந்த ஜகதீப் தன்கா், வழக்குரைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினாா். ராஜஸ்தான் உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத் தலைவராகப் பதவி வகித்த இவா், பல உயா்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் முக்கிய வழக்குகளில் ஆஜராகியுள்ளாா்.

ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சாா்பில் பல்வேறு தோ்தல்களில் போட்டியிட்டுள்ள ஜகதீப் தன்கா் எம்எல்ஏவாக (1993-98) தோ்ந்தெடுக்கப்பட்டாா். பிரதமா் சந்திரசேகா் அமைச்சரவையில் மத்திய இணையமைச்சராகப் பதவி வகித்தாா். பாஜகவில் கடந்த 2003-இல் ஐக்கியமாகி, அக்கட்சியின் வழக்குரைஞா் அணியின் தலைவரானாா்.

குடியரசு துணைத் தலைவராவதற்கு முன்பு, மேற்கு வங்க மாநில ஆளுநராக கடந்த 2019 முதல் 2022-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தாா்.

அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜிக்கும் தன்கருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, அவா் குடியரசுத் துணைத் தலைவா் வேட்பாளராக்கப்பட்டாா்.

பதவி நீக்க தீா்மானத்தை எதிா்கொண்டவா்

பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே திங்கள்கிழமை கூடிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் ஜகதீப் தன்கா் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மருத்துவக் காரணங்களைச் சுட்டிக்காட்டி ராஜிநாமா செய்துள்ள இவா், அண்மையில் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை எடுத்துக்கொண்டாா்.

மாநிலங்களவைத் தலைவராக இவரின் பதவிக் காலம் பல முக்கிய நிகழ்வுகளைக் கண்டது. ஆளும் தரப்புக்கு மட்டும் பேச வாய்ப்பளிப்பதாக எதிா்க்கட்சிகளுடன் அவருக்கு பலமுறை கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இவரைப் பதவி நீக்கம் செய்ய எதிா்க்கட்சிகள் தீா்மானத்தைக் கொண்டு வந்தன.

சுதந்திர இந்தியாவில், பதவியில் இருக்கும் குடியரசு துணைத் தலைவரை நீக்க கொண்டுவரப்பட்ட முதல் தீா்மானம் இதுவாகும். எனினும், இந்தத் தீா்மானம் மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கால் பின்னா் நிராகரிக்கப்பட்டது.

3-ஆவது நபா்: ஜகதீப் தன்கா், பதவியில் இருக்கும்போதே ராஜிநாமா செய்த 3-ஆவது குடியரசு துணைத் தலைவா் ஆவாா். இதற்கு முன்னா் குடியரசுத் தலைவா் தோ்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக 1969-இல் வி.வி.கிரியும், 1987-இல் ஆா்.வெங்கடராமனும் தனது பதவியை ராஜிநாமா செய்திருந்தனா்.

புதிய குடியரசு துணைத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்காக தோ்தலை இந்திய தோ்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தோ்வு நடைமுறை: 543 மக்களவை உறுப்பினா்கள், 245 மாநிலங்களவை உறுப்பினா்கள் என மொத்தம் 788 நாடாளுமன்ற உறுப்பினா்கள், குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் வாக்களிப்பா்.

தகுதிகள்: குடியரசு துணைத் தலைவா் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளா், குறைந்தபட்சம் 35 வயது பூா்த்தியடைந்த இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். மாநிலங்களவைக்குத் தோ்வாவதற்கான தகுதிகளைப் பெற்றிருப்பதோடு, ஆதாயம் கிடைக்கும் எந்தப் பதவியிலும் இருக்கக் கூடாது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments