முகப்பு
இந்தியா

அமர்நாத் யாத்திரையில் விபத்து: பக்தர்களுக்கு தீவிர சிகிச்சை!

அமர்நாத் யாத்திரை சென்ற பேருந்து விபத்து: பக்தர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

Updated On : 22 ஜூலை 2025, 5:58 pm IST
- ANI
பகிர்:

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரிலுள்ள அமர்நாத் புனித தலத்துக்கு பக்தர்களை அழைத்துச் சென்ற ஒரு பேருந்து இன்று(ஜூலை 22) பகல் 2.30 மணியளவில் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்து பக்தர்கள் காயமடைந்தனர்.

அதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்புப்படையினரால் பேருந்திலிருந்த பக்தர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4 பக்தர்கள் படுகாயமடைந்திருப்பதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ’கேலா மோர் சுரங்கம் - டி2 ’ வழியாக அந்த பேருந்து இயக்கப்பட்டபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

summary

A bus carrying Amarnath Yatra pilgrims met with an accident in the Kela Morh Tunnel-T2 on Jammu-Srinagar National Highway

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments