உடைந்த இரும்புப் பாலம் ANI
இந்தியா

மேற்கு வங்கத்தில் இரும்புப் பாலம் உடைந்து விபத்து!

மேற்கு வங்கத்தில் தண்ணீர் குழாய் செல்லும் இரும்புப் பாலம் உடைந்து விபத்துக்குள்ளானது.

தினமணி செய்திச் சேவை

மேற்கு வங்கத்தில் தண்ணீர் குழாய் செல்லும் இரும்புப் பாலம் உடைந்து விபத்துக்குள்ளானது.

தாமோதர் நதியின் மீது பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் குழாய்கள் மூலம் நகர்புறங்களுக்கான குடிநீர் அனுப்பப்படும் நிலையில், பாலம் உடைந்ததால் அந்தக் குழாய்கள் சேதமடைந்துள்ளன. இதனால் அன்சோல் மாவட்டத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தின் அன்சோல் மாவட்டத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தாமோதர் நதியின் மீது பாலம் அமைத்து தண்ணீர் கொண்டுசெல்லும் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொது சுகாதார பொறியியல் துறை மூலம் இந்த ராட்சத குழாய்களில் நகர்புறங்களுக்கான நீர்த்தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக தாமோதர் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், இரும்புப் பாலம் உடைந்து விபத்துக்குள்ளானது. இதில், தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்களும் உடைந்து நீர் வீணாக வெளியேறி வருகிறது.

இதையும் படிக்க | ஜூலை 29 -ல் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்! மோடி பங்கேற்பு

West Bengal: An iron bridge over Damodar River in Kalajharia area of Asansol, collapsed today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் தெரு நாய் கடித்ததில் ஜப்பான், கென்யா பயிற்சியாளர்கள் படுகாயம்!

2 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டாம்: மத்திய சுகாதார அமைச்சகம்

அக்.5-ல் நெல்லை, மதுரையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்

பாடகர் ஸுபீன் கர்க் மரணம்: விழா ஏற்பாட்டாளர் உச்ச நீதிமன்றத்தில் மனு!

உறவுகள் நீயே... பவித்ரா ஜனனி!

SCROLL FOR NEXT