நீலகிரி: கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தொழிலாளிகள் மூவர் பலி
நீலகிரியில் கிணறு வெட்டும் பணியின்போது, மண் சரிந்ததில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி
நீலகிரியில் கட்டுமானப் பணியில் மண் சரிந்ததில் புலம்பெயர் தொழிலாளிகள் 3 பேர் பலியாகினர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே ஜெகதளா பேரூராட்சியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் கிணறு வெட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ரஹ்மான், நசீர், உஸ்மான் என்ற 3 இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், பணியின்போது மண் சரிந்து இளைஞர்கள் மீது விழுந்ததில் மண்ணுக்குள் மூவரும் புதையுண்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மண் சரிவில் சிக்கிய மூவரையும் மீட்புப் படையினர் மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
Advertisement
Advertisement
இருப்பினும், இளைஞர்கள் மூவரும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 workers from West Bengal killed at construction site in Nilgiris district
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.