கோப்புப் படம் 
இந்தியா

கேரளத்தில் 5 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

கேரளத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

கேரள மாநிலத்தில், அடுத்த 5 நாள்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளம் மற்றும் மகாராஷ்டிரம் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகியிருப்பதால், ஜூலை 29 ஆம் தேதி வரையிலான அடுத்த 5 நாள்களுக்கு, கேரளத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம், இன்று (ஜூலை 25) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஜூலை 25 முதல் ஜூலை 27 ஆம் தேதி வரை கேரளத்தில் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதனால், தாழ்வான மற்றும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வடமேற்கு வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள குறைந்தக் காற்றழுத்தப் பகுதியானது, அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களை நோக்கி நகரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கேரளத்தில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியது முதல், அம்மாநிலத்தில் தொடர் கனமழை பெய்து வருகின்றது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஜிபே, போன்பே, பிம் செயலிகளைப் பயன்படுத்துபவரா? ஆக.1 முதல் புதிய விதிமுறைகள்!

கேரள மாநிலத்தில், அடுத்த 5 நாள்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT