வாகனத்தை  வழிமறித்த  யானை கோப்புப்படம்.
இந்தியா

இந்தியாவில் யானை தாக்குதல்: 2,800க்கும் மேற்பட்டோர் பலி

2019 முதல் 2023 வரை இந்தியாவில் யானை தாக்குதல்களால் 2,800க்கும் மேற்பட்டோர் பலியானதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

2019 முதல் 2023 வரை இந்தியாவில் யானை தாக்குதல்களால் 2,800க்கும் மேற்பட்டோர் பலியானதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநிலங்களவையில் எம்.பி. ஜான் பிரிட்டாஸின் கேள்விக்கு பதிலளித்த சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் பகிர்ந்து கொண்ட தரவுகளின்படி, 2019 முதல் 2023 வரை யானைத் தாக்குதல்களில் மொத்தம் 2,869 பேர் பலியாகியுள்ளனர்.

நாட்டில் அதிகபட்சமாக ஒடிசாவில் 624 பேரும் அதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் 474 பேர், மேற்கு வங்கம் 436 பேர், அசாம் 383பேர் மற்றும் சத்தீஸ்கர் 303 பேர் பலியாகியாகியுள்ளனர் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

யானை தாக்குதல்களால் ஆண்டுதோறும் ஏற்படும் உயிரிழப்புகள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன.

தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்: பதற்றமான சுழல்!

2019-20 ஆம் ஆண்டில் 595 ஆக இருந்த பலி எண்ணிக்கை 2023-24 ஆம் ஆண்டில் 629 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் யானை தாக்குதல்களால் முறையே 256 மற்றும் 160 பேர் பலியாகியுள்ளனர்.

அதேசமயம், 2020 மற்றும் 2024க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் புலி தாக்குதல்களால் 378 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More than 2,800 people lost their lives in elephant attacks in India from 2019 to 2023, with Odisha, Jharkhand and West Bengal among the worst-affected states, the Rajya Sabha was informed on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT