204 பேரின் உடல்கள் மீட்பு! யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஆமதாபாத் காவல் ஆணையர்
ஆமதாபாத் விமான விபத்து பற்றி நகர காவல்துறை ஆணையர் தகவல்..
ஆமதாபாத் விமான விபத்தில் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என ஆமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஏஐ171 புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதில் 168 இந்தியர்கள், 53 பிரிட்டன் நாட்டவர்கள், 7 போர்ச்சுகீசியர், 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் என 242 பேர் பயணித்துள்ளனர்.
விமான நிலையத்திற்கு அருகே மேதானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரியின் மாணவர் விடுதியின் மீது விமானம் விழுந்ததில் அங்கிருந்த மருத்துவ மாணவர்களும் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
விமானத்தில் பயணித்தவர்கள் இறந்த நிலையிலேயே இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | வெற்றிகரமான மாடல் 787 - 8 ட்ரீம்லைனர் விபத்தில் சிக்கியது எப்படி?
ஆமதாபாத் கமிஷனர் ஜி.எஸ். மாலிக் இதுபற்றி கூறுகையில்,
"ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர்கள் யாரும் உயிர் பிழைத்ததாகத் தெரியவில்லை. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து கணக்கிடப்பட்டு வருகிறது. தற்போது வரை 204 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 47 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்" என்று கூறியுள்ளார்.
இந்த விமானத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் பயணித்த நிலையில் அவரும் உயிரிழந்ததாகத் தெரிகிறது.
விமானத்தில் பயணித்த 242 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமானம், மருத்துவ விடுதியின் மீது விழுந்ததால் அங்குள்ளவர்களும் உயிரிழந்துள்ளனர். விடுதியில் இருந்த மருத்துவ மாணவர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் உள்ளனர். காயமடைந்த 25 பேரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர்பிழைத்த ஒருவர்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.