முகப்பு
இந்தியா

குஜராத் விமான விபத்து! கூடுதலாக ரூ. 25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானோருக்கு இடைக்கால நிவாரணமாக ஏர் இந்தியா கூடுதலாக ரூ. 25 லட்சம் அறிவிப்பு

Updated On : 14 ஜூன், 2025 at 2:02 PM
விபத்தில் பலியானோரின் குடும்பத்தினர்
பகிர்:

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானோருக்கு இடைக்கால நிவாரணமாக ஏர் இந்தியா கூடுதலாக ரூ. 25 லட்சம் அறிவித்துள்ளது.

ஜூன் 12ஆம் தேதி அகமதாபாதிலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், விமான நிலையத்துக்கு அருகே விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில் இருந்த 242 பேரில் 241 பேர் பலியாகினர். பலியானவர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என ஏர் இந்தியாவின் டாடா குழுமம் அறிவித்த நிலையில், தற்போது கூடுதலாக ரூ. 25 லட்சம் இடைக்கால நிவாரணம் அளிப்பதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

விபத்தில் பலியானோர்களின் குடும்பத்தினர் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் குடும்பத்தினரின் உடனடி தேவைகளுக்காக கூடுதலாக இத்தொகை வழங்கப்படுவதாக ஏர் இந்தியா தெரிவித்தது.

முழு கட்டுரையைப் படிக்க →