FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உ.பி: அக்பர்பூர் பேருந்து நிலையம் பெயர் மாற்றம்! முதல்வர் அறிவிப்பு!

உத்தரப் பிரதேசத்தின் அக்பர்பூர் பேருந்து நிலையத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 17 ஜூன் 2025, 12:16 pm IST
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்
பகிர்:

உத்தரப் பிரதேசத்தின் அக்பர்பூர் பேருந்து நிலையத்தின் பெயர் ஷ்ராவன் தம் பேருந்து நிலையம் என மாற்றப்படுவதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் நேற்று (ஜூன் 16) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்யநாத், அங்குள்ள அக்பர்பூர் பேருந்து நிலையத்தின் பெயர் ஷ்ராவன் தம் பேருந்து நிலையம் என மாற்றப்படுவதாக அறிவித்தார்.

இந்தப் பெயரானது, ராமாயணத்தில் வரும் ஷ்ராவன் குமார் எனும் கதாபாத்திரத்தின் புகழைப் போற்றும் விதமாகச் சூட்டப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதேபோல், மறைந்த ஜெய்ராம் வர்மா என்பவரின் நினைவாக, தண்டா பேருந்து நிலையத்தின் பெயரும் ஜெய்ராம் வர்மா பேருந்து நிலையம் என மாற்றப்பட்டுள்ளது.

அம்பேத்கர் நகர் மாவட்டத்துக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், சுமார் ரூ. 1,184 கோடி மதிப்பிலான 194 வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், அந்த நிகழ்ச்சியில் 102 திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், 92 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இதையும் படிக்க: திறக்கப்படுகிறது கேஜிஎஃப் தங்கச் சுரங்கம்! 80 ஆண்டுகளுக்குப் பின்! இனி தங்கம் விலை?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments