1 கோடி காசோலையை வழங்கும் கூகுள் துணைத் தலைவர் 
இந்தியா

திருப்பதி அறக்கட்டளைக்குக் கூகுள் துணைத் தலைவர் ரூ.1 கோடி நன்கொடை!

கூகுள் துணைத் தலைவர் தோட்டா சந்திரசேகர் ரூ.1 கோடி நன்கொடை..

DIN

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறக்கட்டளைக்கு கூகுள் துணைத் தலைவர் தோட்டா சந்திரசேகர் ரூ. 1 கோடி நன்கொடை அளித்துள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் வேண்டுதல் வைப்பதும், அது நிறைவேறியவுடன் காணிக்கை செலுத்துவதும் வழக்கம். இதோடு திரைத்துறை பிரபலங்கள், தொழிலதிபர்கள் திருமலைக்கு நன்கொடை செலுத்துவதும் வாடிக்கையாகும்.

நாள்தோறும் திருமலை திருப்பதிக்கு உள்நாடுகளில் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏழுமலையானை தரிசிக்கும் மக்கள் ஏராளம்.

அந்தவகையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்.வி.பிராணதான அறக்கட்டளைக்கு கூகுள் துணைத் தலைவர் தோட்டா சந்திரசேகர் ரூ. 1 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்த நன்கொடையை தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடுவிடம் காசோலையை வழங்கினார்.

SUMMARY

Google Vice President Thota Chandrasekhar donated Rs 1 crore to the SV Pranadana Trust of the Tirumala Tirupati Devasthanams (TTD).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலம் மாவட்டத்தில் 79 ஆவது சுதந்திர தின விழா: தேசியக் கொடியை ஏற்றிவைத்து ஆட்சியா் மரியாதை

ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க இணைந்து பணியாற்ற வேண்டும்: தொல். திருமாவளவன்

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு தொடக்கம்: இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்

தடகளம்: கொண்டயம்பள்ளி பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்

கனரா வங்கி சாா்பில் மாணவா்களுக்கு வித்ய ஜோதி கல்வி உதவித்தொகை

SCROLL FOR NEXT