கோப்புப்படம்.  
இந்தியா

ஜார்க்கண்ட்: ஒரே மாதத்தில் யானையின் 3ஆவது உடல் கண்டெடுப்பு

ஜார்க்கண்டில் ஒரே மாதத்தில் யானையின் 3ஆவது உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

ஜார்க்கண்டில் ஒரே மாதத்தில் யானையின் 3ஆவது உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் லதேஹர் மாவட்டத்தில் உள்ள பலமு புலிகள் காப்பகத்தில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக சனிக்கிழமை பிற்பகல் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

நிகழ்விடத்துக்கு விரைந்த வன அதிகாரிகள் பெட்லா மலைத்தொடருக்கு உட்பட்ட தெல்லி மலைப்பகுதியில் இருந்து யானையின் உடலை மீட்டனர்.

இதன்மூலம் லதேஹர் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் காட்டுயானையின் 3ஆவது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. யானைகளுக்கு இடையிலான மோதல்களில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தில்லி: 15 ஆண்டுகளுக்கு முந்தைய வாகனங்களைக் கண்டறிவது எப்படி?

பெட்லா வன அதிகாரி உமேஷ் துபே கூறுகையில், வியாழனன்று டீன் கோரியா அருகே யானையுடன் ஏற்பட்ட மோதலின் போது யானை ஒன்றுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் யானைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

ஆனால், சிகிச்சை அளித்த இடத்தை விட்டு வெளியேறி, சனிக்கிழமை யானையைத் தேடியபோது தெல்லி மலை அருகே அதன் சடலம் கண்டெடுக்கப்பட்டது தெரிவித்தார்.

யானையின் உடல் உடற்கூராய்வுக்குப் பின் புதைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூக்கி டிரைலர்!

‘ஆட்சியில் பங்கு.. கூட்டணியில் குழப்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ - எடப்பாடி பழனிசாமி!

எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் 3வது காலாண்டுன் லாபம் 62 சதவீதம் சரிவு!

டி20 உலகக் கோப்பை: ரூதர்போர்ட் சிக்ஸர் மழை! இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

எல்லையில் கண்ணிவெடி விபத்தில் ராணுவ வீரர் படுகாயம்!

SCROLL FOR NEXT