கோப்புப்படம்.  
இந்தியா

ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக இரட்டைக் குழந்தைகளை கொலை செய்த தாய் கைது

ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக இரட்டைக் குழந்தைகளை கொலை செய்த தாய் கைது

DIN

ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக கூறி இரட்டைக் குழந்தைகளை தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வார் மாவட்டத்தில் வசித்து வருபவர் மகேஷ் சக்லனி. இவருடைய மனைவி சுபாங்கி. இவர்களுக்கு ஆறு மாத இரட்டைக் குழந்தைகள் இருந்தன. இத்தம்பதியுடைய குழந்தைகளின் திடீர் மரணம் தந்தை மகேஷ் சக்லனிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், தனது மனைவி கடைக்குச் சென்று பால் வாங்கிவிட்டு திரும்பி வந்தபோது இரண்டு குழந்தைகளும் மயக்கமடைந்திருப்பதைக் கண்டார். உடனே அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் குழந்தைகள் இறந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த புகாரையடுத்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.

கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனியை பாதித்திருக்கும் புற்றுநோய் என்ன?

விசாரணையில் தாயே தலையணையை வைத்து குழந்தைகளை கொன்றிருப்பது தெரியவந்தது. தனது குழந்தைகளின் தொடர்ச்சியான அழுகையால் தான் விரக்தியடைந்ததாகவும், அது தன்னை தூங்க விடாமல் தடுத்ததாகவும் அந்தப் பெண் கூறியிருக்கிறார். இதன்காரணமாகவே குழந்தைகளைக் கொன்றதாக குற்றத்தை தாய் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் ஹரித்வாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

SCROLL FOR NEXT