கொடைக்கானல் சிறுமி கொலை வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றம் 
இந்தியா

மணிப்பூர் நிவாரண முகாமில் சிறுமி பலி!

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம்.

DIN

மணிப்பூரில் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுமி பலியானதைத் தொடர்ந்து அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மணிப்பூர் சூரசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாமில் குடும்பத்துடன் தங்கியிருந்த சிறுமி நேற்று மாலை முதல் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

குடும்பத்தினர் அவரைத் அங்குள்ள பகுதிகளில் தேடி வந்தனர். பின்னர் நள்ளிரவில் நிவாரண முகாம் வளாகத்திலேயே அந்தச் சிறுமி சடலமாக கிடந்தார்.

சிறுமியின் உடல் முழுக்க காயங்கள் இருந்துள்ளன. அவரது கழுத்துப் பகுதியில் துணியால் இறுக்கப்பட்டது போன்ற காயம் ஏற்பட்டிருந்தது. மேலும், உடலில் ரத்தக் கறைகளும் காணப்பட்டன.

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அதிகாரிகள் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சிறுமி கொலை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT