முகப்பு
இந்தியா

2,000 நகரங்களில் புதிய சேவையைத் தொடங்கும் ஏர்டெல்!

ஏர்டெல் நிறுவனம் தொலைக்காட்சிப் பிரியர்களுக்காக புதிய சேவையைத் தொடங்கியுள்ளது.

Updated On : 26 மார்ச் 2025, 6:20 pm IST
கோப்புப் படம்
பகிர்:

தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டுவரும் ஏர்டெல் நிறுவனம் தொலைக்காட்சிப் பிரியர்களுக்காக புதிய சேவையைத் தொடங்கியுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான படங்கள், இணையத் தொடர்களை கண்டுகளிக்கும் வகையில் ஐபிடிவி என்ற புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.

நெட்பிளிக்ஸ், அமேசான், ஆப்பிள் டிவி, சோனி லைவ் என 29 முன்னணி ஓடிடி தளங்கள் உள்பட 350க்கும் அதிகமான சேனல்களைக் கண்டுகளிக்கலாம்.

Advertisement

Advertisement

இவற்றுடன் அதிவேக இணைய வசதியும் (வைஃபை) வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கான ஆரம்ப விலையாக ரூ. 699 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் தொடக்க நிலையில் இருப்பதால், வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், ஐபிடிவி திட்டத்தை ஏர்டெல் தேங்க்ஸ் செயலி மூலம் பெறுபவர்களுக்கு 30 நாள்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

தில்லி, ராஜஸ்தான், அஸ்ஸாம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இச்சேவையை ஏர்டெல் நிறுவனம் தொடங்கியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களிலும் அடுத்தடுத்த சில வாரங்களில் இச்சேவை கிடைக்கும் வகையிலான பணிகளை ஏர்டெல் மேற்கொண்டுள்ளது.

இச்சேவையை ஏர்டெல்.இன் அல்லது ஏர்டெல் ஸ்டோர்ஸ் (airtel.in or Airtel stores) தளங்களிலும் வாடிக்கையாளர்கள் பெறலாம். ஏற்கெனவே ஏர்டெல் இணைய சேவையைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் முகவர்களிடம் கேட்டு ஐபிடிவி திட்டத்துக்கு மாறலாம் என ஏர்டெல் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகள் சரிந்ததையடுத்து சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments