எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகள் சரிந்ததையடுத்து சென்செக்ஸ் 700 புள்ளிகள் சரிவு!

சென்செக்ஸ் 728.69 புள்ளிகள் குறைந்து 77,288.50 புள்ளிகளாகவும், நிஃப்டி 181.80 புள்ளிகள் குறைந்து 23,486.85 புள்ளிகளாகவும் நிலைபெற்றது.

News image

கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2025, 5:42 pm IST

பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி, இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சற்று உயர்ந்த நிலையில், முதலீட்டாளர்கள் எஸ்பிஐ, எச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ ஆகிய பங்குகளை விற்பனை செய்ததால் தனது நீண்ட நாள் எழுச்சி பேரணியை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி முடித்து கொண்டு சரிந்து முடிந்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 150.68 புள்ளிகள் உயர்ந்து 78,167.87 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 67.85 புள்ளிகள் உயர்ந்து 23,736.50 புள்ளிகளாக இருந்தது. பிறகு சென்செக்ஸ் 73.05 புள்ளிகள் குறைந்து 77,928.26 புள்ளிகளாகவும், நிஃப்டி 37.55 புள்ளிகள் குறைந்து 23,631.10 புள்ளிகளாகவும் வர்த்தகமானது.

வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 728.69 புள்ளிகள் குறைந்து 77,288.50 புள்ளிகளாகவும், நிஃப்டி 181.80 புள்ளிகள் குறைந்து 23,486.85 புள்ளிகளாகவும் நிலைபெற்றது.

இன்று மும்பை பங்குச் சந்தையில் 808 பங்குகள் உயர்ந்தும் 2,799 பங்குகள் சரிந்தும் 78 பங்குகள் விலை மாற்றமின்றி முடிந்தது.

உயர்ந்து வரும் இந்திய ரூபாய் மதிப்பு மற்றும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் விற்பனையில் தளர்வு ஆகிய பல நேர்மறையான விஷயங்கள் சந்தைகள் உள்வாங்கியுள்ள நிலையிலும், கட்டணங்கள் தொடர்பான நிச்சயமற்ற தன்மை முதலீட்டாளர்களை விளிம்பில் வைத்திருக்கும் நிலையில் அவை இந்திய பொருளாதாரத்தை கணிசமாக சீர்குலைப்பதாக இல்லை.

சீமென்ஸ் நிறுவனத்தின் பிரிவினை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் அங்கீகரித்ததாக நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், அதன் பங்குகள் 7 சதவிகிதம் உயர்ந்து முடிந்தது.

சீமென்ஸ் எனர்ஜி இந்தியா லிமிடெட் தனி ஒரு நிறுவனமாக செயல்பட இது வழி வகுக்கும் நிலையில், மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, சீமென்ஸ் பங்குதாரர்கள் ஏப்ரல் 7, 2025 அன்று நிர்ணயிக்கப்பட்ட பதிவு தேதியின்படி, அவர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு சீமென்ஸ் லிமிடெட் பங்கிற்கும் சீமென்ஸ் எனர்ஜி இந்தியாவின் ஒரு பங்கைப் பெறுவர்.

உணவு டெலிவரி நிறுவனங்களான சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி பேங்க் ஆஃப் அமெரிக்கா செக்யூரிட்டீஸ் அறிக்கையைத் தொடர்ந்து 4 சதவிகிதம் வரை சரிந்து முடிந்தது.

நிஃப்டியில் டிரெண்ட், இண்டஸ்இண்ட் வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், கிராசிம் மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய பங்குகள் உயர்ந்தும் என்டிபிசி, டெக் மஹிந்திரா, பிபிசிஎல், சிப்லா மற்றும் பஜாஜ் பைனான்ஸ் ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள சொமேட்டோ, என்டிபிசி, டெக் மஹிந்திரா, மாருதி, பஜாஜ் பைனான்ஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, சன் பார்மா, ஆக்ஸிஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் இண்டஸ்இண்ட் வங்கி, பார்தி ஏர்டெல், பஜாஜ் ஃபின்சர்வ், பவர் கிரிட், அதானி போர்ட்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்தது.

ஆசிய சந்தைகளில் இன்று சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை உயர்ந்த முடிந்தது.

அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) உயர்வுடன் முடிவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.