கோப்புப்படம்  
இந்தியா

எச்சில் துப்பியவர்களிடம் ரூ. 32 லட்சம் அபராதம் வசூல்: ரயில்வே

எச்சில் துப்பியவர்களிடம் லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டிருப்பது பற்றி...

DIN

ரயில் நிலையங்களில் எச்சில் துப்பிய குற்றத்துக்காக மூன்று மாதங்களில் ரூ. 32 லட்சம் அபராதம் வசூலித்துள்ளதாக கிழக்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கிழக்கு ரயில்வே நிர்வாகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் தூய்மையை உறுதி செய்வதற்கும், கழிவுகள் இல்லாத ரயில் பாதைகளை உருவாக்கவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், இந்தாண்டு தொடக்கம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில், கிழக்கு ரயில்வே நிர்வாகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் எச்சில் துப்பியவர்கள் மற்றும் அசுத்தம் செய்தவர்கள் என மொத்தம் 31,576 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அவர்களிடமிருந்து மொத்தம் ரூ. 32,31,740 வசூலிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராத நடவடிக்கைகள் மூலம் நீண்டகால மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளதாக ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.

மேலும், ரயில் பயணிகளிடம் தூய்மையை வலியுறுத்தி சுகாதாரத் துறை ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள் இணைந்து விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

SCROLL FOR NEXT