பிகாரில் மகா கூட்டணி ஆட்சியில் தலித், முஸ்லீம் துணை முதல்வர்கள்! - தேஜஸ்வி சூசகம்!
பிகாரில் மகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தலித், முஸ்லீம் துணை முதல்வர்கள் இருப்பார்கள் என முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளதைப் பற்றி...
பிகார் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு நாள்களே உள்ள நிலையில் , எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஒரு முஸ்லிம் மற்றும் ஒரு தலித் உள்பட பல துணை முதல்வர்கள் இருப்பார்கள் என்று ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரும், முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் சூசகமாகக் கூறியுள்ளார்.
பிகாரில் 243 தொகுதிகளுக்கான பேரவைத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப் பதிவும், நவம்பர் 14 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.
தேர்தலுக்கு இன்னும் ஓரிரு நாள்களே இருப்பதால், தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன.
Advertisement
Advertisement
முதல்வர் நிதீஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸின் மகா கூட்டணி மற்றும் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி தனியாகவும் களம் காண்பதால் பிகார் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், மகா கூட்டணியின் முதல்வர் முதல்வர் வேட்பாளரும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ், “பிகாரில் ஒரு முஸ்லிம் துணை முதல்வர் தனது தலைமையில் இருப்பார் என்று வெளிப்படையாகக் கூறவில்லை.
இருப்பினும், “அதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் நிராகரிக்கவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். துணை முதல்வர் எந்த சமூகத்திலிருந்தும் வரலாம்” எனத் தெரிவித்தார்.
Tejashwi Yadav's multiple deputy CM plan in Bihar includes Muslims and Dalits
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.