அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு புயல் எச்சரிக்கை!
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவானது - ஐ.எம்.டி.
அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தால்(ஐ.எம்.டி.) புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியிருப்பதைத் தொடர்ந்து, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது நாளை(நவ. 4) மேலும் வலுவடையக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது, மியான்மர் - வங்கதேசம் கடலோரப் பகுதிகளை நோக்கி வடக்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, அந்தமான் நிகோபார் தீவுகளையொட்டிய கடல் பகுதிகள் பயங்கர சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
summary