மெலிஸா புயல்: கியூபா, ஜமைக்காவுக்கு 20 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பிய இந்தியா!
மெலிஸா புயலால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு 20 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டது குறித்து...
மெலிஸா புயலால் பாதிக்கப்பட்ட கியூபா மற்றும் ஜமைக்கா ஆகிய நாடுகளுக்கு தலா 20 டன் அளவிலான நிவாரணப் பொருள்களை இந்திய அரசு அனுப்பியுள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில், கடந்த சில நாள்களுக்கு முன்பு உருவான மெலிஸா புயல் ஜமைக்கா, கியூபா, உள்ளிட்ட நாடுகளில் கரையைக் கடந்தது.
வரலாற்றில் மாபெரும் சக்திவாய்ந்த புயலாக அறியப்படும் மெலிஸா புயலால், கரீபியன் பகுதியில் உள்ள நாடுகள் பலத்த பொருள் மற்றும் உயிர் சேதங்களைச் சந்தித்துள்ளன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மெலிஸா புயலினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளான ஜமைக்கா மற்றும் கியூபாவுக்கு, இந்தியா சார்பில் தலா 20 டன் அளவிலான நிவாரணப் பொருள்களை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
இதில், மருந்துகள், மின்சார ஜெனரேட்டர்கள், தற்காலிக கூடாரங்கள், சுகாதாரப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் சிறப்பு விமானங்கள் மூலம் அந்நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, கியூபா தலைநகர் ஹவாணா மற்றும் ஜமைக்கா தலைநகர் கிங்ஸ்டன் ஆகிய நகரங்களுக்கு இந்தியா அனுப்பி வைத்த நிவாரணப் பொருள்கள் அனைத்தும் நேற்று (நவ. 6) சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:நிம்மதியாக ஓய்வுபெற முடியாது: தலைமைத் தேர்தல் ஆணையருக்கு பிரியங்கா காந்தி மிரட்டல்?
The Indian government has reportedly sent 20 tonnes of relief supplies each to Cuba and Jamaica, which were affected by Hurricane Melissa.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.