ஆப்பிரிக்க நாடுகளுக்கு குடியரசுத் தலைவர் இன்று சுற்றுப்பயணம்!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அங்கோலா மற்றும் போட்ஸ்வானா நாடுகளுக்குச் செல்வது குறித்து...
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று (நவ. 8) அங்கோலா மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று முதல் நவ.13 ஆம் தேதி வரையில் மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள அங்கோலா மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள போட்ஸ்வானா ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்திய குடியரசுத் தலைவர் ஒருவர் அங்கோலா மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகளுக்குச் செல்வது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. இந்தப் பயணத்தில் அந்நாடுகளில் நடைபெறும் முக்கிய அரசு நிகழ்ச்சிகளில் முர்மு பங்கேற்கவுள்ளார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அங்கோலா அதிபர் ஜோவோ லூரென்கோ மற்றும் போட்ஸ்வானா அதிபர் டுமா கிடியோன் போகோ ஆகியோரது அழைப்புகளை ஏற்று அந்நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் குடியரசுத் தலைவர் முர்மு அங்கோலாவின் 50 ஆவது சுதந்திர நாள் விழாவில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், அங்கோலா மற்றும் போட்ஸ்வானா அதிபர்களுடன் பொருளாதாரம், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுடனான உறவுகள் குறித்த பேச்சுவார்த்தை நடத்தவுள்ள குடியரசுத் தலைவர் முர்மு, அந்நாடுகளின் நாடாளுமன்றத்திலும் உரையாற்றுவார் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தில், அங்கோலா மற்றும் போட்ஸ்வானாவில் வசிக்கும் இந்தியர்களைச் சந்தித்து அவர்களுடன் குடியரசுத் தலைவர் முர்மு கலந்துரையாட திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!
President Draupadi Murmu will visit Angola and Botswana today (Nov. 8).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.