மோடியுடன் கலந்துரையாடல்! பங்கேற்றால் 50 மதிப்பெண்கள்!
பிரதமர் மோடியுடனான கலந்துரையாடலில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியுடனான கலந்துரையாடலில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகண்டில் உள்ள தேவ் பூமி பல்கலைக்கழகத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் நிகழ்வில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அப்போது மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாட உள்ளார்.
சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில் சேவையில் மாற்றம்
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி நடைபெறுவதால் மாணவர்கள் கலந்துகொள்வார்களா என்கிற சந்தேகம் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில் பிரதமர் மோடியுடனான கலந்துரையாடலில் பங்கேற்கும் மாணவர்களுக்கு 50 மதிப்பெண் வழங்கப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அதுவும், பி.டெக் (கணினி) இரண்டாம் ஆண்டு மற்றும் பி.சி.ஏ இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களை குறிப்பிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பானது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள மூத்த வழக்குரைஞரும், சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷண் 'மோடி மோடி' என்று சப்தமிட்டால் எத்தனை மதிப்பெண்கள்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
The announcement that students who participate in discussions with Prime Minister Modi will be given marks has caused controversy.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.