மேக்கேதாட்டு அணை தமிழ்நாட்டை பாதிக்காது: கர்நாடக முதல்வர் பேச்சு!
மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா பேச்சு...
மேக்கேதாட்டு அணையால், தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
கர்நாடகத்தின், தெற்கு பெங்களூரு மாவட்டத்தில் மேக்கேதாட்டு பகுதியில் காவிரி ஆற்றின் மீது அணை கட்டப்பட வேண்டும் எனும் முயற்சியை மீண்டும் தொடங்கும் நடவடிக்கையாக, மைசூரில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசியுள்ளார்.
இந்த நிலையில், கர்நாடகத்தில் நிகழாண்டில் (2025) அதிகளவில் மழை பெய்துள்ளதால், தமிழ்நாட்டிற்கு அளவுக்கு அதிகமான தண்ணீர் திறக்கப்பட்டதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுபற்றி, அவர் பேசியதாவது:
“தமிழ்நாட்டிற்கு 177.25 டி.எம்.சி. அளவிலான தண்ணீர் மட்டுமே திறக்கப்பட வேண்டும். ஆனால், நாங்கள் கூடுதலாக 150 டி.எம்.சி. தண்ணீர் திறந்துள்ளோம். இது, இரண்டு மடங்கு அதிகம்.
மேக்கேதாட்டு அணையால் தமிழ்நாட்டிற்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை. நாம் இந்தமுறை அவர்களுக்கு அதிகளவிலான தண்ணீரை திறந்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, காவிரி ஆற்றின் மீது மேக்கேதாட்டு அணையானது கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் நீர் பகிர்வு கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் கூறி கர்நாடக அரசின் திட்டத்தை, தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வெடிச் சத்தம்... பரபரப்பு.. களேபரம்.! யூடியூபரின் கேமராவில் பதிவான தில்லி கார் விபத்து!
Karnataka Chief Minister Siddaramaiah has said that Tamil Nadu will not be affected by the Mekedatu Dam.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.