முகப்பு
இந்தியா

தில்லி குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு காது கேளாமை பாதிப்பு!

தில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களில்

Updated On : 13 நவம்பர், 2025 at 3:06 PM
தில்லி குண்டு வெடிப்பு
பகிர்:

தில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த பலருக்கும் காது கேளாமை பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தில்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் பலியான நிலையில், அவர்களில் 8 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், சம்பவத்தில் காயமடைந்தோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேர் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவிலும், 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் (ICU), 4 பேர் நரம்பியல் அறுவைச் சிகிச்சைப் பிரிவிலும், ஒருவர் அதிர்ச்சி சிகிச்சை மையத்திலும் (Trauma Centre) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் பெரும்பாலும் காது கேளாமை, காதுகளில் வலி, கை கால்களில் வீக்கம், சிராய்ப்பு காரணங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிக்க: தில்லி கார் வெடிப்பு சம்பவத்தில் யாரும் நினைத்துப் பார்க்காத தண்டனை! அமித் ஷா

summary

Red Fort blast victims suffer hearing loss, pain in ear

முழு கட்டுரையைப் படிக்க →