தேஜஸ்வி யாதவ். 
இந்தியா

முதல்வர் வேட்பாளர் தேஜஸ்விக்கு 8,500 வாக்குகள் பின்னடைவு!

முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி 8,500 வாக்குகள் பின்னடைவு ஏற்பட்டுள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மகாகத்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் 8,500 வாக்குகள் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றது.

தற்போதைய நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 208 தொகுதிகளில் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. அதேவேளையில், மகாகத்பந்தன் கூட்டணி 28 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

மகாகத் பந்தன் கூட்டணியில் உள்ள முக்கியமான கட்சியான காங்கிரஸ் 61 இடங்களில் போட்டியிட்டு கிசன்கஞ்ச் மற்றும் பாகல்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில், ரகோபூர் தொகுதியில் போட்டியிட்ட மகாகத்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், பிகாரின் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் மதியம் 3.40 மணி நிலவரப்படி, 15 சுற்று வாக்குப் பதிவின் முடிவில் 52,942 வாக்குகளையும், பாஜக வேட்பாளர் சதீஷ் குமார் 61,403 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதன்மூலம், தேஜஸ்வி யாதவ் 8,461 வாக்குகள் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

RJD leader Tejashwi Yadav trails on the Raghopur seat by a margin of 8461 votes after 15/30 rounds of counting, as per official EC trends.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புது வெள்ளை மழை பொழிகின்றது... ரஜிஷா விஜயன்!

கடல் என் பார்வையில்... ரைசா வில்சன்!

மஹுவா தொகுதி: லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் தோல்வி

“திமுகவில் யார் வேண்டுமானாலும் முதல்வராக முடியுமா?” சேகர்பாபுவுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

உக்ரைன் தலைநகரில் ரஷியா பயங்கர தாக்குதல்! 6 பேர் பலி; 35 பேர் படுகாயம்!

SCROLL FOR NEXT