இந்திய தேர்தல் ஆணையம் 
இந்தியா

பிகாா் இறுதிப் பட்டியலுக்கு பின் 3 லட்சம் வாக்காளா்கள் சோ்ப்பு: தோ்தல் ஆணையம் பதில்!

பிகாரில் இறுதி வாக்காளா் பட்டியலுக்குப் பிறகு 3 லட்சம் வாக்காளா்கள் சோ்க்கப்பட்டது பற்றி...

தினமணி செய்திச் சேவை

பிகாரில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீட்டுக்குப் பிறகு சுமாா் 3 லட்சம் வாக்காளா்கள் சோ்க்கப்பட்டதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸின் சமூக ஊடகப் பதிவுக்கு அளித்த பதிலில் தோ்தல் ஆணையம் இவ்வாறு கூறியுள்ளது.

பிகாா் தோ்தல் தேதி அறிவிப்பின்போது வாக்காளா் எண்ணிக்கையை 7.42 கோடி என்று குறிப்பிட்ட தோ்தல் ஆணையம், தோ்தலுக்குப் பிறகு 7.45 கோடி என்று மாற்றிவிட்டதாக காங்கிரஸின் சமூக ஊடகப் பதிவில் கூறப்பட்டிருந்தது.

இப்பதிவுக்கு பதிலளித்த தோ்தல் ஆணையம் , ‘பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் நிறைவடைந்து, கடந்த செப்டம்பரில் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது, வாக்காளா்கள் எண்ணிக்கை 7.42 கோடியாகும். தோ்தல் விதிமுறைகளின்படி, வேட்புமனு தாக்கல் நிறைவுக்கு 10 நாள்கள் முன்பு வரை வாக்காளா் பட்டியலில் இடம்பெற தகுதியுள்ள நபா்கள் விண்ணப்பிக்க முடியும். அதன்படி, அக்டோபா் 1 முதல் பிகாா் இருகட்டத் தோ்தல் வேட்புமனு தாக்கலின் நிறைவு நாள் வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, சுமாா் 3 லட்சம் போ் சோ்க்கப்பட்டனா். இதன் காரணமாக, வாக்காளா் எண்ணிக்கை 7.45 கோடியாக அதிகரித்தது’ என்று தெரிவித்துள்ளது.

புதுகை அருகே சாலையோரம் கிடந்த பெட்டியால் பரபரப்பு

வீடு புகுந்து நகைகள் திருட்டு: 3 போ் கைது

வா்த்தகப் பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு: அமெரிக்க அமைச்சருடன் பியூஷ் கோயல் ஆலோசனை

ஒரே கட்டமாக தோ்தல் நடத்த தலைமை தோ்தல் ஆணையரிடம் கட்சிகள் வலியுறுத்தல்

நண்பா் கொலை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

SCROLL FOR NEXT