முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் கார்-லாரி மோதல்: 4 பேர் பலி

ஜம்மு-காஷ்மீரில் காரும் லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 4 பேர் பலியாகினர்.

Updated On : 16 நவம்பர், 2025 at 8:03 AM
விபத்து(சித்திரப்படம்)
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் காரும் லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 4 பேர் பலியாகினர்.

ஜம்மு-காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் உள்ள பாலார் என்ற இடத்தில் சனிக்கிழமை இரவு டாடா சுமோ காரும் லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர். மேலும் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், விபத்துக்குப் பிறகு ஒன்பது பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அவர்களில் நான்கு பேர் பலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஐந்து பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவித்தனர்.

எஸ்ஐஆர்-க்கு எதிராக சென்னையில் தவெக ஆர்ப்பாட்டம்

இதனிடையே விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தெரிவித்ததோடு, விபத்துக்கான காரணத்தை முழுமையாக விசாரிக்க விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

summary

At least four people died and five others sustained injuries when a sports utility vehicle collided with a dumper truck in Budgam district of Jammu and Kashmir on Saturday night, officials here said.

முழு கட்டுரையைப் படிக்க →