பெங்களூரில் வேகமாக வந்த கார், பேருந்து மீது மோதியதில் இளைஞர்கள் 5 பேர் பலியாகினர்.
கர்நாடக மாநிலம், துமகுரு-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஜிண்டால் அருகே உள்ள மேம்பாலத்தில் சனிக்கிழமை இரவு வேகமாக வந்த கார் தடுப்புச் சுவரில் மோதி பின்னர் அரசுப் பேருந்து மீது மோதியது. இந்த சம்பவத்தில் இளைஞர்கள் 5 பேர் பலியாகினர்.
பலியானவர்கள் துர்கா பிரசாத் (20), கேசவ் (19), லலித் (22), ஹர்ஷித் (20), தனுஷ் (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தொட்டபல்லாபூரைச் சேர்ந்தவர்கள். போலீஸார் கூறியதாவது, துமகூருவிலிருந்து பெங்களூருவுக்குச் சென்ற கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் கார் குறுக்கே சென்று பெங்களூருவிலிருந்து ஹுப்பள்ளி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில், காரின் முன் பகுதி முற்றிலுமாக நொறுங்கியது. நான்கு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
விபத்தில் பேருந்தின் முன் பகுதியும் சேதமடைந்தது. இருப்பினும், பேருந்தில் இருந்த 43 பயணிகளும் காயமின்றி தப்பினர். மதநயகனஹள்ளி போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தி வழக்கு பதிவு செய்துள்ளனர். விபத்து குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.