புதின் இந்தியா வருகை! ரஷிய துணைப் பிரதமருடன், ஜெய்சங்கர் ஆலோசனை!
ரஷியாவின் துணைப் பிரதமருடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை நடத்தியது குறித்து...
ரஷிய அதிபரின் இந்தியப் பயணம் குறித்து ரஷிய துணைப் பிரதமர் டெனிஸ் மண்டுரோவை நேரில் சந்தித்து மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தில்லியில், வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள 23 ஆவது இந்தியா - ரஷிய உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இந்தியா வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரஷிய அதிபர் புதினின் இந்தப் பயணத்தின் ஏற்பாடுகள் குறித்து, மாஸ்கோவில் ரஷியாவின் துணைப் பிரதமர் டெனிஸ் மண்டுரோவை, இன்று (நவ. 19) நேரில் சந்தித்து மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
Advertisement
Advertisement
இத்துடன், மாஸ்கோவில் நேற்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பில், அவரது தில்லி பயணம் மற்றும் உச்சி மாநாட்டின் ஏற்பாடுகள் குறித்து ரஷிய அதிபரிடம் அமைச்சர் ஜெய்சங்கர் எடுத்துரைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற 21 ஆவது ரஷியா - இந்திய உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இந்தியாவுக்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தில்லி செங்கோட்டை வாகன நிறுத்துமிடத்தில் வெடிகுண்டை உருவாக்கினாரா உமர்? தகவல்கள்!
Union External Affairs Minister S Jaishankar met Russian Deputy Prime Minister Denis Manturov in person and discussed Russian President Vladimir Putin's visit to India.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.