ரஷிய துணைப் பிரதமருடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 
இந்தியா

புதின் இந்தியா வருகை! ரஷிய துணைப் பிரதமருடன், ஜெய்சங்கர் ஆலோசனை!

ரஷியாவின் துணைப் பிரதமருடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை நடத்தியது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

ரஷிய அதிபரின் இந்தியப் பயணம் குறித்து ரஷிய துணைப் பிரதமர் டெனிஸ் மண்டுரோவை நேரில் சந்தித்து மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

தில்லியில், வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள 23 ஆவது இந்தியா - ரஷிய உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இந்தியா வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரஷிய அதிபர் புதினின் இந்தப் பயணத்தின் ஏற்பாடுகள் குறித்து, மாஸ்கோவில் ரஷியாவின் துணைப் பிரதமர் டெனிஸ் மண்டுரோவை, இன்று (நவ. 19) நேரில் சந்தித்து மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இத்துடன், மாஸ்கோவில் நேற்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பில், அவரது தில்லி பயணம் மற்றும் உச்சி மாநாட்டின் ஏற்பாடுகள் குறித்து ரஷிய அதிபரிடம் அமைச்சர் ஜெய்சங்கர் எடுத்துரைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக, கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற 21 ஆவது ரஷியா - இந்திய உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இந்தியாவுக்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தில்லி செங்கோட்டை வாகன நிறுத்துமிடத்தில் வெடிகுண்டை உருவாக்கினாரா உமர்? தகவல்கள்!

Union External Affairs Minister S Jaishankar met Russian Deputy Prime Minister Denis Manturov in person and discussed Russian President Vladimir Putin's visit to India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காா்-பைக் மோதல்: பொறியியல் மாணவா்கள் இருவா் மரணம்

வாா்டரை தாக்கிய மத்திய சிறை கைதி மீது வழக்கு

வீழ்ச்சியடைந்து வரும் போகி மேளம் விற்பனை, வியாபாரிகள் கவலை!

12.1.1976: த.நா. முழுவதும் கார்டுக்கு 25 கிலோ கூடுதல் அரிசி சப்ளை - பொங்கலை முன்னிட்டு அரசு நடவடிக்கை: அதிகாரி தகவல்

ஷாலிமாா் பாக் பெண் கொலை வழக்கில் இதுவரை கைது செய்யப்படவில்லை; துப்பாக்கிச் சூடு நடத்தியவா் சிசிடிவியில் சிக்கியுள்ளதாக தகவல்!

SCROLL FOR NEXT