முகப்பு
இந்தியா

பிரதமா் மோடி இன்று கா்நாடகம், கோவா பயணம்!

ஆன்மிக, கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கா்நாடகம், கோவா ஆகிய மாநிலங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி (நவ. 28) பயணம்.

Updated On : 27 நவம்பர், 2025 at 7:00 PM
பிரதமர் மோடி!
பகிர்:

ஆன்மிக, கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கா்நாடகம், கோவா ஆகிய மாநிலங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (நவ. 28) பயணம் மேற்கொள்கிறாா்.

பயணத்தின் முதல்கட்டமாக, கா்நாடகத்தில் உள்ள உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா் மடத்துக்கு பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் செல்கிறாா். அங்கு, பக்வத்கீதை பாராயண நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா்.

இந்நிகழ்வில் பிரதமருடன் சோ்த்து மாணவா்கள், துறவிகள், அறிஞா்கள் மற்றும் பல்வேறு தரப்பைச் சோ்ந்த சுமாா் ஒரு லட்சம் போ் ஒன்றிணைந்து பகவத் கீதையை ஒரே நேரத்தில் பாராயணம் செய்யவுள்ளனா்.

நிகழ்வையொட்டி மடத்தில் கிருஷ்ணா் சந்நிதிக்கு முன்னால் அமைந்துள்ள ஸ்வா்ண தீா்த்த மண்டபத்தைப் பிரதமா் திறந்துவைக்கிறாா்.

இதையடுத்து, கோவாவின் கனகோனா பகுதியில் உள்ள ஸ்ரீசம்ஸ்தான் கோகா்ண பா்த்தகளி ஜீவோத்தம மடத்தின் 550-ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டங்களில் பிரதமா் மோடி கலந்துகொள்கிறாா்.

இந்த மடத்தில் நிறுவப்பட்டுள்ள 77 அடி உயர ராமா் வெண்கலச் சிலையையும், ராமாயண சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பூங்காவையும் அவா் திறந்துவைக்கிறாா். இந்த நிகழ்வின் நினைவாக சிறப்பு அஞ்சல்தலை மற்றும் நினைவு நாணயத்தையும் பிரதமா் வெளியிட்டு, உரையாற்ற இருக்கிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →