தெலங்கானா: ராகிங் செய்ததாக நான்கு மருத்துவ மாணவர்கள் இடைநீக்கம்
தெலங்கானாவில் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்ததாக நான்கு மருத்துவ மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
தெலங்கானாவில் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்ததாக நான்கு மருத்துவ மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
தெலங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியின் சீனியர் மாணவர்கள் தங்கள் விடுதியில் ஜூனியர் மாணவர்களை சிட்-அப் செய்ய கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
சுமார் 15 நாள்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக ஜூனியர் ஒருவர் புகார் அளித்திருக்கிறார். புகாரைத் தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரியில் கல்லூரி அதிகாரிகள் முதற்கட்ட விசாரணை நடத்தினர்.
Advertisement
Advertisement
ரேகிங் தடுப்புக் குழுவின் கூட்டத்தைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட நான்கு மூத்த மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாணவர்கள் 4 பேரும் இரண்டு மாதங்களுக்கு வகுப்புகளுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகம்: ஓய்வுபெறும் கார் ஓட்டுநருக்கு ஓட்டுநராக மாறிய பல்கலை. பதிவாளர்
மேலும் ஓர் ஆண்டுக்கு விடுதியில் இருந்தும் நீக்கப்பட்டனர் என்று உயர் அதிகாரி தெரிவித்தார்.
Four second-year medical students have been suspended for allegedly ragging their juniors here, officials said on Sunday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.