வந்தே பாரத் ரயில் கோப்புப்படம்.
இந்தியா

பிகாரில் வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பலி, ஒருவர் காயம்

பிகாரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

பிகாரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிகாரின் புர்னியா மாவட்டத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் வெள்ளிக்கிழமை பலியாகினர். மேலும் ஒருவர் காயமடைந்தனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காயமடைந்ட நபர் சிகிச்சைக்காக புர்னியா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புர்னியா சந்திப்பின் நிலைய மேலாளர் முன்னா குமார் கூறுகையில், கதிஹர்-ஜோக்பானி பிரிவில் அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. இருட்டாகவும், வானிலை மேகமூட்டமாகவும் இருந்ததால், சிறுவர்கள் வேகமாக வந்த ரயிலை சரியான நேரத்தில் கவனிக்க முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு தயங்குவது ஏன்?: ஜெயகுமார்

இதனிடையே பலியானோரின் குடுத்தினருக்கு முதல்வர் நிதீஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்த நபர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் அவர் கூறினார். விபத்தில் பலியானவர்கள் 14-18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், கஸ்பா தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

Four persons were killed and another was injured after being hit by a Vande Bharat train in Purnea district of Bihar on Friday while trying to cross the tracks, an official said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்யிடம் கேளுங்க! நாங்க என்ன தவெகவின் Marketing officer-ஆ? - Annamalai

கரூர் சம்பவத்தை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு| செய்திகள்: சில வரிகளில் | 3.10.25

மாருதி சுசுகியின் உற்பத்தி 26% உயர்வு!

கீழடி அருங்காட்சியகத்தில் முதல்வர்! புகைப்படம் எடுத்துக்கொண்ட மக்கள்!

அமித் ஷாவிடம் ஒப்பந்தம் போட்டு அரசியலில் நடித்து வருகிறார் விஜய் - அப்பாவு

SCROLL FOR NEXT