பிகாரில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் பங்கேற்ற சில தலைவர்கள் தெரிவித்தனர்.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ராஷ்திரிய ஜனதா தளம்,
காங்கிரஸ்,
பாஜக,
ஐக்கிய ஜனதா தளம்,
ஆம் ஆத்மி,
பகுஜன் சமாஜ்,
மார்க்ஸிய கம்யூனிஸ்ட்,
தேசிய மக்கள் கட்சி,
லோக் ஜன்சக்தி கட்சி(ராம் விலாஸ் அணி),
ராஷ்திரிய லோக் ஜன்சக்தி கட்சி உள்ளிட்ட பிகாரில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகள் தரப்பிலிருந்து பிரதிநிதிகள் கலந்துகொண்டு கருத்துகளைத் தெரிவித்தனர்.
பிகாரில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் ‘சத்’ பூஜை அக். 28-இல் கொண்டாடப்பட உள்ள நிலையில், அவ்விழா நிறைவடைந்தபின், காலதாமதமின்றி உடனடியாக தேர்தலை நடத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அப்போது முடிந்தவரையிலும் ஒரேகட்டமாக அல்லது இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தவும் பெரும்பாலான கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.