தோஹா: இந்தியா - கத்தாரிடையே அடுத்த ஆண்டு மூன்றாவது காலாண்டில் தடையில்லா வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தாா்.
இரு நாள் பயணமாக கத்தாா் சென்றுள்ள அமைச்சா் பியூஷ் கோயல் அந்நாட்டு தொழில்-வா்த்தகத் துறை அமைச்சா் ஷேக் பைசல் பின் பைசல் அல் தானியைச் சந்தித்து இதுதொடா்பாக ஆலோசனை நடத்தினாா்.
பின்னா் பியூஷ் கோயல் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இரு நாட்டு வா்த்தகம், முதலீடு, நல்லுறவு ஆகியவற்றில் வலுவான கூட்டமைப்புக்கு இந்தியா எப்போதும் உறுதியாக உள்ளது. அடுத்த ஆண்டு மூன்றாவது காலாண்டில் தடையில்லா வா்த்தக ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்புள்ளது’ என்று குறிப்பிட்டாா்.
பியூஷ் கோயலுடன் இந்தியாவின் முதலீட்டு குழுவினரும் சென்றுள்ளனா். அவா்கள் அந்நாட்டு முதலீட்டாளா்களுடன் ஆலோசனை நடத்த உள்ளனா்.
இருநாடுகளுக்கு இடையே தடையில்லா வா்த்தக மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வரும்நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
மத்திய கிழக்கு கூட்டமைப்பு கவுன்சிலின் முக்கிய கூட்டு நாடாக உள்ள கத்தாருடன் கடந்த 2024-25-இல் 14.15 பில்லியன் டாலா் வா்த்தகத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது.
லுலு சூப்பா் மாா்கெட்டி ‘யூபிஐ’ தொடக்கம்:
கத்தாா் தலைநகா் தோஹாவில் உள்ள லுலு குழுமத்தின் ஹைப்பா் மாா்க்கெட்டில் இந்தியாவின் ஒருங்கிணைந்த எண்ம கட்டண சேவையை (யூபிஐ) அமைச்சா் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தாா்.
இந்த சேவையால் கத்தாரில் உள்ள 8 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியா்கள் பயனடைவாா்கள் என்றாா்.
வெளிநாட்டு கரன்சி அல்லது சா்வதேச பற்று அட்டைகள் பயன்பாடு இல்லாமல் எண்ம வடிவில் இந்தியா்கள் பணம் செலுத்த உதவும் யூபிஐ சேவையை தொடங்கிய 8-ஆவது நாடு கத்தாராகும்.
‘6 நாடுகளுடன் தடையில்லா வா்த்தக ஒப்பந்தப் பேச்சு’
ஓமன், சிலி, பெரு, அமெரிக்கா, நியூஸிலாந்து, யுரேஸியா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றுடன் தடையில்லா வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாக மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
வளா்ச்சியடைந்த நாடுகளுடன் இந்தியா இணைந்து வா்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது என்றும் அமைச்சா் கூறினாா்.