பிகார் தேர்தலில் 4 லட்சம் பாதுகாப்புப் படையினர் 
இந்தியா

பிகார் தேர்தலில் 4 லட்சம் பாதுகாப்புப் பணியாளர்கள்: வினய் குமார்

நடைபெறவிருக்கும் பிகார் தேர்தல் குறித்து காவல்துறை இயக்குநர் கூறுவது பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என காவல்துறை இயக்குநர் ஜெனரல் வினய் குமார் தெரிவித்தார்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இரண்டு கட்டங்களாக நவம்பர் 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று நடத்தப்படுவதாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வினய் குமார் கூறுகையில்,

மாநிலத்தில் நக்சல் நடவடிக்கைகள் கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், இந்த முறை எந்த வாக்குச் சாவடிகளும் இடமாற்றம் செய்யப்படாது. தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மத்திய ஆயுதக் காவல் படையின் சுமார் 500 நிறுவனங்கள் ஏற்கெனவே தேர்தலுக்கு முந்தைய பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த 500 நிறுவனங்கள் 2 அல்லது 3 நாள்களிலும், மேலும் 500 நிறுவனங்கள் அக்டோபர் மூன்றாவது வாரத்திற்குள் தேர்தல் பணிக்காக மாநிலத்தை அடைவார்கள்.

ஒரு நிறுவனத்தில் சுமார் 100 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பிகார்க காவல்துறையின் 60 ஆயிரம் பணியாளர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் பிற மாநிலங்களிலிருந்து ரிசர்வ் பட்டாலியன்களின் 2 ஆயிரம் பணியாளர்கள், பிகார் சிறப்பு ஆயுதக் காவல் படையின் 30 ஆயிரம் பணியாளர்கள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டுக் காவல்கள், புதிதாகப் பணியமர்த்தப்பட்ட சுமார் 19 ஆயிரம் காவலர்கள், 1.5 லட்சம் கிராமப்புறக் காவலர்கள் வாக்குச் சாவடிப் பணியிலும் ஈடுபடுவார்கள் என்று அவர் கூறினார்.

மாநிலத்தில், குறிப்பாகக் கிராமப்புறங்களில் சாலை உள்கட்டமைப்பு குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளதால், தொலைதூரப பகுதிகளுக்குப் பாதுகாப்புப் பணியாளர்களைச் சாலை வழியாக அனுப்ப முடிவு செய்துள்ளோம். தொலைதூரப் பகுதிகளில் தேர்தல் பணிகளுக்காகப் பாதுகாப்புப் பணியாளர்களை ஹெலிகாப்டர் மூலம் அனுப்பாமல் இருப்பது மாநிலத்தில் இதுவே முதல் முறையாகும்.

பதற்றம் நிறைந்த பகுதிகளில் வாக்காளர்களின் முழு பாதுகாப்பையும் நாங்கள் உறுதி செய்வோம். மேலும் விவிஐபிக்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்க ஒவ்வொரு மாவட்டத்திலும் விஐபி பாதுகாப்புக் குழுவை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

மாநிலத்தில் மொத்தவுள்ள 90,712 வாக்குச் சாவடிகளில், 13,911 நகர்ப்புறங்களிலும் 76,801 கிராமப்புறங்களிலும் உள்ளன.

More than four lakh security personnel will be deployed across Bihar to ensure free and fair assembly elections, Director General of Police (DGP) Vinay Kumar said on Thursday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷேன் நிகாமின் புதிய படத்தில்..! மாட்டிறைச்சி காட்சியை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு!

பிக் பாஸ் வீடு மீண்டும் திறப்பு! நன்றி தெரிவித்த கிச்சா சுதீப்!

3-வது சதம் விளாசிய மார்னஸ் லபுஷேன்; ஆஸி. அணியில் இழந்த இடத்தை மீண்டும் பிடிப்பாரா?

ரிங்கு சிங்கிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்! தாவூத் இப்ராஹிம் கும்பலை சேர்ந்த இருவர் கைது!

நில், கவனி, செல்லாதே... சான்வி மேக்னா!

SCROLL FOR NEXT