கொல்கத்தா: முதல்வர் இல்லம் அருகே ஏர்கன் வைத்திருந்த நபர் கைதாகி விடுதலை
கொல்கத்தாவில் முதல்வர் மமதா பானர்ஜியின் இல்லம் அருகே ஏர்கன் வைத்திருந்த நபர் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
கொல்கத்தாவில் முதல்வர் மமதா பானர்ஜியின் இல்லம் அருகே ஏர்கன் வைத்திருந்த நபர் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
மேற்கு வங்க மாநிலம், தெற்கு கொல்கத்தாவில் உள்ள ஹஸ்ரா கிராசிங்கில் முதல்வர் மமதா பானர்ஜியின் இல்லத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் தனது பையில் ஏர்கன்னுடன் நபர் ஒருவர் வியாழக்கிழமை கைசெய்யப்பட்டார்.
தனியார் பள்ளியின் ஆசிரியர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட தேபஞ்சன் என்கிற அந்த நபர், காளிகட் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
உரிம ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு அந்த நபரை போலீஸார் விடுவித்ததாக மூத்த அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவெகெளடா உடல்நிலையில் முன்னேற்றம்
விசாரணையில் ஏர்கன்னை ஏன் இவ்வாறு எடுத்துச் செல்கிறார் என்று போலீஸார் கேட்டதாக அதிகாரி மேலும் கூறினார். திரிணமூல் காங்கிரஸின் தேசிய பொதுச் செயலர் அபிஷேக் பானர்ஜியின் வீடும் சம்பவ இடத்திலிருந்து சுமார் 1.5 கி.மீ தொலைவில் உள்ளது.