குடியரசுத் தலைவரையும் குடியரசுத் துணைத் தலைவரையும் நேரில் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்வை முதலில் சந்தித்த பிரதமர், அதனைத்தொடர்ந்து, குடியரசுத் துணைத் தலைவர். சி. பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்தார். இந்தப் படங்களை அவர் தமது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த 2014முதல் தீபாவளித் திருநாளை முப்படைகளுடன் இணைந்து கொண்டாடுவதை வழக்கமாக்கி கொண்டுள்ள பிரதமர் மோடி இம்முறை இந்திய கடற்படையின் ஐஎன்எ விக்ராந்த் போர்க்கப்பலில் கொண்டாடினார். கோவா கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள உள்நாட்டில் தயரிக்கப்பட்ட விமானம் தாங்கிப் போர்க்கப்பலான ஐஎன்எ விக்ராந்த் போர்க்கப்பலை ஞாயிற்றுக்கிழமை(அக். 19) மாலை சென்றடைந்த பிரதமர் மோடி, இன்று(அக். 20) காலை வரை அங்கிருந்து வீரர், வீராங்கனைகளுடன் உற்சாகமாக தீபாவளியைக் கொண்டாடினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.