டிஜிட்டல் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறி, ஓய்வுபெற்ற அரசு ஊழியரை 14 நாள்கள் வீட்டிலேயே சிறை வைத்து, அவரிடமிருந்து ரூ.1.62 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பெங்களூரில், அமலாக்கத்துறை அதிகாரிகள் போல நடித்த சைபர் குற்றவாளிகள், ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம், மும்பையில் நடந்த சோதனை ஒன்றில், உங்களுக்குத் தொடர்புடைய சில ஆவணங்களைக் கைப்பற்றியிருப்பதாகவும், டிஜிட்டல் முறையில் கைது செய்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி ரமேஷ் என்ற ஓய்வுபெற்ற அரசு ஊழியர், டிஜிட்டல் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து 14 நாள்கள் அவரை டிஜிட்டல் முறையில் மோசடியாளர்கள் கண்காணித்து வந்துள்ளனர்.
மும்பை சைபர் குற்றப் பிரிவுத் துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக, விடியோ அழைப்பில் பேசிய மோசடியாளர் காவல்துறை சீருடையில் இருந்ததால் ரமேஷ் ஏமாந்திருக்கிறார்.
ரமேஷ் மீது, ஆள் கடத்தல் மற்றும் பண மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவருடைய வங்கிக் கணக்கு விவரங்கள் முதலீடுகள் என அனைத்துத் தகவலையும் கேட்டிருக்கிறார்கள். இவர்கள் காவல்துறை என நம்பி அனைத்துத் தகவலையும் கொடுத்திருக்கிறார். இவர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதை உறுதி செய்யப் போவதாகவும் செல்போனுக்கு ஓடிபி வரும் என்பதை தெரிவிக்க வேண்டும் என்று மிரட்டி செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.62 கோடியை மோசடியாளர்கள் பணப்பரிமாற்றம் செய்திருக்கிறார்கள். பணப் பரிமாற்றம் முடிந்த பிறகு மோசடியாளர்கள், ரமேஷை தொடர்பு கொள்ளாததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் ரமேஷ். விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.